அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.