லாரி மீது மோதிய அரசுப் பேருந்து.. 17 பேர் பலி

18பார்த்தது
தெலங்கானா மாநிலத்தில், லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் அரசுப் பேருந்தும், ஒரு டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 70 பயணிகள் இருந்தனர். காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி