வீட்டின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவள்ளூர் திருத்தணியில் அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிராக்டரை கடந்து செல்ல முயன்றபோது பிரேக் பழுதாகி சாலையோரம் இருந்த முருங்கை மரத்திலும், பின்னர் ஒரு வீட்டின் பின்புறத்திலும் மோதி நின்றது. இந்த விபத்தில் வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, வீட்டு உரிமையாளர் குடும்பத்தினர் காயமின்றி உயிர் தப்பினர்.