உள்ளாட்சி அமைப்புகளில் திட்டம் மற்றும் கட்டட அனுமதிகளை 24 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அனுமதிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், மக்களுக்குச் சிரமம் தரக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்த 5 நாட்களுக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.