டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2A தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டித்துள்ளார். அவர் கூறியதாவது, “தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்பதை உரிய அவகாசத்துடன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும். இனிமேல் இப்படியொரு தவறு நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.