அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியைப் பார்த்தால் பரிதாபமாக இருப்பதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (பிப்.9) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், விஜயை ஊழல்வாதி என இபிஎஸ் குற்றம்சாட்டுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் எந்த அரசு பதவியிலும் இல்லாத நிலையில், அவர் எப்படி ஊழல் செய்தார் என சொல்ல முடியும். முதலமைச்சராக இருந்த அவருக்கு இதுகூட தெரியவில்லையா?” என்றார்.