ஆப்பிள் பழம் தண்ணீரில் மூழ்காமல் மிதப்பதற்கு, அதன் உள்ளே இருக்கும் சிறிய காற்று இடைவெளிகளே காரணம் எனப்படுகிறது. ஒரு ஆப்பிளின் உட்பகுதியில் சுமார் 25% வரை காற்று நிரம்பியிருக்கும். இதனால் அதன் அடர்த்தி தண்ணீரின் அடர்த்தியை விட குறைவாக இருப்பதால் அது எளிதாக மிதக்கிறது. இதே காரணத்தால் தர்பூசணி போன்ற சில பழங்களும் நீரில் மிதக்கின்றன. அறிவியல் விதிப்படி, ஒரு பொருளின் அடர்த்தி தண்ணீரை விட குறைந்தால் அது தண்ணீரில் மிதக்கும்.