மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த புதுமணத்தம்பதி ராஜா ராகுவன்ஷி (28) - சோனம் (24) தேனிலவுக்காக மேகாலயா சென்றபோது ராஜா படுகொலை செய்யப்பட்டார். சோனம் மாயமானார். இந்த வழக்கில் அதிர்ச்சி திருப்பமாக சோனம் தனது கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக சோனம் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர். சோனமிடம் விசாரணை நடக்கும் நிலையில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.