உத்தரப் பிரதேச மாநிலத்தில், காதலியுடன் திரிந்த கணவரை, கையும் களவுமாக பிடித்த மணைவி, சரமாரியாக தாக்கியுள்ளார். ஜான்சியில் ஒருவர், தனது கள்ளக்காதலியுடன் சுற்றியுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி, கணவரை நடுரோட்டில் வைத்து வெளுத்தார். அங்கு கூடிய பொதுமக்களும் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில், போலீசை அழைக்குமாறு கூட்டத்தில் இருந்தவர்களிடம் கூறினார். ஆனால் ஒருவரும் அவருக்கு உதவி செய்யவில்லை. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.