தெலங்கானா மாநிலம் சாரங்கபூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் - லாஸ்யா தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. குடும்பத்தை விட்டுவிட்டு ராஜசேகர் சென்றுவிட்ட நிலையில், மனவுளைச்சலில் இருந்த லாஸ்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை பார்க்க கூட ராஜசேகர் வரவில்லை. இதனால் கடுப்பான லாஸ்யாவின் குடும்பத்தார், ராஜசேகரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் திருநங்கை தீப் என்பவருடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களை மடக்கிய குடும்பத்தினர் போலீசில் ஒப்படைத்தனர்.