தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், மத்திய குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 155 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு பயிற்சிக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு https://naanmudhalvan.tn.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் 13.11.2025 முதல் 24.11.2025 வரை விண்ணப்பிக்கலாம்.