சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று (பிப்.13) நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், தான் வெறுப்பு அரசியல் செய்வதற்காக அரசியலுக்கு வரவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு உண்மையான நன்றிக்கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளதாக அவர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.