தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத் தலைவராக இருந்த சந்தியா வேணுகோபால் சர்மா, திட்டம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவுச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ஜெ.குமரகுருபரன், வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.