“தைரியம் இருந்தா எங்களைத் தொடுங்க பார்ப்போம்” என ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் இன்று (நவ.5) நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “கரூர் விவகாரத்திற்கு பிறகு நீதிமன்றத்திற்கும் செல்ல முடியவில்லை. ஊடங்களிடமும் பேச முடியவில்லை. அதிலும் ஒருவர் பெரிய மீசையை வைத்து அவர் மட்டும் தான் பேசிக்கொண்டு இருக்கிறார். சட்டையை பிடிச்சு உன்ன அடிக்கனும். தைரியம் இருந்தா தொடுங்க பார்ப்போம்” என ஆவேசமாக பேசினார்.