பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வலது கண்ணில் 85% பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இஸ்லாமாபாத் மருத்துவமனையில் அவருக்கு அவசர கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. அடியாலா சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட அவருக்கு, விழித்திரை நிபுணர்கள் மூலம் அறுவை சிகிச்சை மற்றும் இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.