பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டி அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள புதிய சிறைக்கு மாற்றப்பட உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார். ஊழல் வழக்குகளில் 2023 முதல் சிறையிலிருக்கும் இம்ரான் கானுக்கு, சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பார்வை திறன் 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.