மே மாதத்தின் கடைசி நாளான இன்று மட்டும் அரசுத் துறைகளில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தவெக அரசு, இக்காலியிடங்களை விரைந்து நிரப்பி இளைஞர்களுக்கு அரசு
வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.