டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை (பிப்.12) நமீபியா அணியுடன் இந்திய அணி மோதவுள்ள நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு காரணமாக அவருக்கு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.