குஜராத்தில் பதிவு திருமணத்திற்கு விண்ணப்பிக்கும் காதலர்களின் விவரங்கள், இனி அவர்களது பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் உடனடியாக அனுப்பப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கட்டாய திருமணங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், இது காதலர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பலரும் விமர்சித்து வருகின்றனர். தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் இந்த புதிய விதிமுறை தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.