புதுச்சேரி எஸ்எஸ்பியாக பணியாற்றி வந்த ஐபிஎஸ் அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பை சிறப்பாக கையாண்டதற்காக அவர் பாராட்டுகளை பெற்றார். கூட்டத்தில் விதிகளை மீறிய புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை கடுமையாக தடுத்த அவரது செயல்பாடு கவனம் பெற்றது. ஈஷா சிங் உட்பட 2 ஐபிஎஸ், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை டெல்லிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.