இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 3) இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன. அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளனர்.