அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரானின் சட்டவிரோத எண்ணை வர்த்தகத்திற்கு ஒத்துழைக்கும் அல்லது ஈரானின் எரிசக்தி தயாரிப்புகளை வர்த்தகம் செய்யும் எந்தவொரு நிறுவனம் மீதும்
அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதிக்கும்" என்று தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் கச்சா எண்ணை மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை எடுத்து சென்ற 8 நிறுவனங்கள் மற்றும் 8 கப்பல்களை முடக்கப்பட்ட சொத்துகளாக
அமெரிக்கா அறிவித்துள்ளது.