அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றத்தை தணித்து மத்தியஸ்தம் செய்வதற்காக,
பாகிஸ்தான் ராணுவத்
தளபதி ஆசிம் முனீர் ஈரான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின் போது ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்,
அமெரிக்கா மீண்டும் ஒரு முட்டாள்தனமான போரை தொடங்கினால் அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என திட்டவட்டமாக எச்சரித்தார். மேலும், தங்களின் நாட்டின் உரிமைகள் மற்றும் இறையாண்மையில் ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.