தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவ.22-ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நவ.24-ஆம் தேதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.