மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப்.24) திடீரென ரத்து செய்துள்ளார். இந்த திடீர் மாற்றத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் திமுகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்றே அவர் இத்தகைய முடிவை எடுத்துள்ளதால், தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.