குற்ற வழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 பணியிடங்களுக்கு 45 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் வழங்கினார். மேலும், மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஐந்து பொருளாளர் (BURSAR) பணியிடங்களுக்கு, சட்டக் கல்வி இயக்ககம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் பணிபுரியும் 5 கண்காணிப்பாளர் மற்றும் மேலாளர்களுக்குப்
பதவி உயர்வு வழங்கினார்.