எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேர அரசியலுக்குள் இழுப்பது ஜனநாயக மாண்பையும், மக்கள் தீர்ப்பையும் அவமதிக்கும் செயல் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்க நினைக்கும் 'தூய சக்திகள்' அரசியலில் கொண்டு வந்தது மாற்றமல்ல, அது சகிக்க முடியாத துர்நாற்றம் என அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். தவெக-வின் அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டி அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.