காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த 84 வயதான முனுசாமியை பராமரிக்க தவறிய அவரது மூன்று மகன்களுக்கு சார்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. வயதான தந்தையை 71 மாதங்களாக ஆதரவின்றி அலையவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி பூஜா இந்த தீர்ப்பை வழங்கினார். மேலும், 71 மாதங்களுக்கான நிலுவை பராமரிப்பு உதவித்தொகையை வழங்கத் தவறினால் சிறை தண்டனை தொடரும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.