‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு.. 3 பேர் மீது குண்டர் சட்டம்

14பார்த்தது
‘ஜனநாயகன்’ திரைப்பட வழக்கு.. 3 பேர் மீது குண்டர் சட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ படம் கடந்த ஏப்.9ஆம் தேதி இணையத்தில் கசிந்தது. இதுகுறித்து, பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உதவி எடிட்டர் பிரசாந்த், செல்வம், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ‘சைபர் கிரைம்' போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி