நகைக்கடன் பெற்றவர்கள் தவணையை செலுத்தத் தவறினால், வங்கி அல்லது நிதி நிறுவனம் உடனடியாக நகையை ஏலத்தில் விட்டுவிடும். ஆனால், தற்போது ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி, முதலில் வாடிக்கையாளருக்கு தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்படும். மேலும், அவகாசம் அல்லது மாற்று தீர்வு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து வாய்ப்புகளும் முடிந்த பிறகே, நகை ஏலத்திற்கு செல்லும் என கூறப்படுகிறது.