சின்னசேலம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். சி. இ. ஓ. , கார்த்திகா முன்னிலை வகித்தார். உதயசூரியன் எம். எல். ஏ. , இலவச புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், பேரூராட்சி சேர்மன் லாவண்யா, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.