கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையைச் சேர்ந்த மா. சாந்தகுமார் (61) என்பவர், கள்ளக்குறிச்சி அருகே மாடூர் கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.