கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டரான கோபி (37) மற்றும் அவரது மனைவி மகேஸ்வரிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கோபி விஷம் அருந்தி மயங்கிய நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.