கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

75பார்த்தது
கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பேரளவானோர் கலந்து கொண்டனர். 

கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் வீதியுலா கள்ளக்குறிச்சி தேரோடும் வீதியில் நடந்தது.
Job Suitcase

Jobs near you