சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தில் சந்திரா என்பவர் வீட்டில் சமையலறைக்குள் புகுந்த நாகப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பரமசிவம் தலைமையிலான சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, படம் எடுத்தபடி சுற்றிக் கொண்டிருந்த நாகப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.