சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (52) மதுபோதையில் வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.