கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ்.வி. பாளையம் கிராமத்தில், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்ற கல் உடைக்கும் தொழிலாளி குமரேசனின் வீட்டில், மர்ம நபர்கள் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.