கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பிரேமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் கலா, துணைச் செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி. ஐ. டி. யூ. மாவட்ட தலைவர் விஜியகுமார் மற்றும் செயலாளர் செந்தில் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.