சிவகங்கை கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்து, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுத் திரும்பிய குருபாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகியோரை, எதிர்த்தரப்பு கும்பல் பட்டப்பகலில் வீச்சரிவாளுடன் வழிமறித்துத் தாக்கியது. இத்தாக்குதலிலிருந்து தப்பிக்க அவர்கள் உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்திற்குள் காரை ஓட்டிச் சென்று தஞ்சமடைந்தனர். தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.