தனது முதல் நாடாளுமன்ற உரைக்கு பாராட்டு தெரிவித்து கவிதை அனுப்பிய கவிஞர் வைரமுத்துக்கு கமல்ஹாசன் பதிலனுப்பிய ஆடியோ வைரலாகி வருகிறது. பாராட்டி அனுப்பிய கவிதையையும், கமல்ஹாசன் அனுப்பிய பதிலையும் வைரமுத்து தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பேசிய கமல்ஹாசன், “நீங்கள் சொல்லாததையா நான் சொல்லப்போகிறேன். அவை எதுவாக இருந்தாலும் பேச்சு வந்துவிடுகிறது” என வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.