காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெரிய ஏரிகளும் நிரம்பி வழியும் நிலையில், நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், நீர்வள ஆதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், பலர் குளிப்பதை தொடர்வதால், கடந்த மூன்று நாட்களில், நத்தப்பேட்டை ஏரி, தாமல் ஏரி, ஓரிக்கை பாலாறு மற்றும் இளையனார் வேலுார் கிராமத்தில் உள்ள செய்யாற்றில் என நான்கு வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்களை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர். இந்த சம்பவங்கள் அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.