மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் உள்ள பல்லவர் கால கடற்கரை கோயிலைச் சுற்றி கடல் நீர் சூழாமல் தடுக்க பாறை கற்கள் மற்றும் காற்று பாதிப்பை தவிர்க்க சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை 2:00 மணியளவில், தரையில் குவிந்திருந்த சவுக்கு சருகுகளில் மர்ம நபரால் தீப்பற்ற வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கோயில் பகுதிக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.