சிங்கபெருமாள் கோவில் அருகே கீரை வியாபாரி சொக்கலிங்கம் (60) நேற்று காலை ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், சொக்கலிங்கம் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.