திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அரசியல்வாதிகள் பலர் பங்கேற்றனர்.