காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் மாவட்ட திறன் மையம் திறனகம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. தி. சினேகா, இ. ஆ. ப. அவர்களால் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி மற்றும் வேலைவாய்ப்பு துறை துணை இயக்குநர் திரு. கி. செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.