தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.