தாம்பரம் அருகே ஆபாச படங்களை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது

456பார்த்தது
தாம்பரம் அருகே ஆபாச படங்களை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்குமார் (32) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்ததை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி புவனேஷ்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி