நாட்டு கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர் கைது

1085பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மழுவங்கரணை கிராமத்தில் கள்ளத்தனமாக பட்டை சாராயம் ஊரல் போட்டு நாட்டு சாராயம் காய்ச்சப்படுவதாக சித்தாமூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூனாம்பேடு காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம், மேல்மருவத்தூர் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக ஆய்வு நடத்தி நாட்டு கள்ளச்சாராயம் காய்ச்சிய தேவன் என்பவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மேலும் தேவன் என்பவர்விவேக் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் இவர் கரிசூலை போட்டு கரி விற்பனை செய்து வருகிறார் இவர் கழனி வெளியில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் ஊரல், மற்றும் காய்ச்சிய சாராயம் 20 லிட்டர் ஆகியவற்றை கைப்பற்றி மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இவர் சோலையில் வேலை செய்யும் மழுவங்கரனை குறும்புறை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் இந்த நாட்டு கள்ளச்சாராயத்தை குடித்த மணி பெருமாள் அய்யனார் ஆகிய மூன்று நபர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவ குழு பரிசோதனை செய்தனர். இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர்.