அச்சரப்பாக்கம் பேரூராட்சியின் அவல நிலை

73பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்ட ஒரு பேரூராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த துப்புரவு பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தித் தூய்மைப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துப்புரவு பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே துப்புரவு பணியாளர்களின் நலம் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி