கொடுங்கையூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 18 வயது வாலிபருடன் பழகி கர்ப்பமானார். வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாத போது அவரை அழைத்துச்சென்று காதலன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.